வானம் கருத்துண்டே வருது –
ஓடிப்போய் வெளியிலுள்ள கொடியிலிருந்து துணிகளை எடுத்தேன்
நல்ல வேளை வண்டில போய் ஸ்கூல்லேந்து குழந்தையை கூட்டிண்டு வந்தாச்சு
காலேஜு பஸ்ஸும் இப்பத்தான் வந்தது, பொண்ணும் வீடு திரும்பியாச்சு
சனியன் புடிச்ச மானம் உறுமுதே தவிர மழை வர மாட்டேங்குது
ஒரு கொட்டு கொட்டினா என்ன , புழுக்கமும் குறையும் கிணத்துல தண்ணியும் ஏறும்

இன்னும் ரெண்டு மணி நேரத்துலே ப்ளைட்ட புடிக்கணுமே

பாட்டிய ஆஸ்பத்ரிக்குக் கூட்டிண்டு போகணுமே

விடிஞ்சா கல்யாண மாச்சே

அவசர மீட்டிங்குக்கு பைக்குல போகணுமே

இன்னிக்கு மட்டும் மழை வராம இருந்தா நல்லா இருக்குமே

கருப்பது மானமா , மனமா ?